திங்கள், ஏப்ரல் 12, 2004

ஓடை பழைய படைப்புகள்-8

ஓடை ஏப்ரல் 2000 தாள் 3

வக்கத்தவன் -- கைகாட்டி

கொதிக்கிற ஒலயில மாட்டிக்கிட்ட
கொசு மாதிரி,
மோட்டாருல சிக்கி அரைபட்ட
பல்லி மாதிரி,

ஓரத்துல ஒட்டியிருந்த
ஒடஞ்ச கம்பத் திங்கப்போய்
ஒரலுல மாட்டிக்கிட்ட
எறும்பு மாதிரி,

ஆசையில
அவசரமாக ஏறி
உச்சந்தாவுக்குப் போய்ட்டு
எறங்க வழி தெரியாம முழிக்கிற
சின்னப்பையன் மாதிரி,

ஒண்ணுக்கடிச்சுட்டு வந்து பாக்கயில
ஒட்டி வந்த ஆட்ல ஒண்ணக்கூடக் காணாம
பண்ணயக்காரனுக்கு
பதில் சொல்ல முடியாம நிக்கிற
பண்ணயாள் மாதிரி,

காசநோய்க்காரன்
காரித்துப்பின எச்சல்ல
மாட்டிக்கிட்ட ஈ மாதிரி,

ஒடம்பெல்லாம் கூனிக் குறுக,
மனசெல்லாம் வலிக்க,
கண்ணீர மறச்சுக்கிட்டுக்
காது கேக்காதவன் மாதிரிப்
போறேன்
கடவீதில
ஒவ்வொருத்தனும்
'என்ன பண்ணிக்கிட்டிருக்கே' னு
கேக்கும்போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக