வியாழன், ஏப்ரல் 08, 2004

மழை-3 துளி-9

T
-கைகாட்டி


மின்சாரம் வெட்டுப்பட்ட
புழுக்கமான இரவொன்றில்
கொசுக்களோடு பிறாண்டிக்
கொல்கின்றன உன் நினைவுகள்
தூக்கம் பறித்து

வீங்கி வலியெடுத்த
உமிழ்நீர்ச் சுரப்பிகள் நசுங்க
உயிர் வாழ்வதற்காய்
உணவு திணிக்கப்படுவது போல்
வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது
எஞ்சிய வாழ்க்கை

விடுபடுவதற்காய்த்
துள்ளி துள்ளி
சுருக்குக் கயிற்றில்
இறுகிச் சாகும் மிருகமாய்
மறக்க நினைத்து மறக்க நினைத்து
மாண்டு போகிறேன்
மறதி தொலைத்து

புரியாதென்று வெளிப்படுத்தியதால்
அவளிடமும்
உணர்ந்து கொள்வாயென்று சொல்லாமல் விட்டதால்
உன்னிடமும்
இறுதியில் குற்றவாளியாய்க்
கழுவிலேற்றப்பட்டது
நான் மட்டும்தானே?

பசப்பி , மயக்கி
உடலுக்காய்ப் பொய் சொல்லி
உதறிப் போதல் பயிலாத
ஒழுக்கவாதிக்கெல்லாம்
கிடைப்பதென்ன
சிலுவைதானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக