புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி - 36

-- அரசு

எனக்கான நீ


உன் மவுனப் பாறைகளை
வெடி வைத்துத் தகர்க்க
விரும்பவில்லை நான்.
மலைகளின் சிறப்பே
மவுனமாக நிற்பதுதான்.
என்னை இன்னும் செதுக்கிவிட்டு
உனக்கான உளியுடன் வருவேன்
அப்போது பிறப்பாய்
எனக்கான நீ.

பயணம்

இயலாதவர்களுக்கு இருக்கைகள் தந்து
பலர் உதவப் பார்த்திருக்கையில்
முள்ளாய்க் குத்தினாலும்
எழச் சொல்ல மறுக்கிறது
பாவி மனது
பக்கத்தில் நீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக