செவ்வாய், ஏப்ரல் 13, 2004

ஓடை பழைய படைப்புகள் 26

ஓடை ஜூலை 2000 தாள் 4

சங்கிலி - கைகாட்டி

'சம்பளம் எப்போ வரும்?'
25-ஆம் தேதியிலிருந்தே
அப்பா போடும்
கிடுக்கி,

அடகிலே முழுகிப்போன
பத்துப்பவுன் சங்கிலியைக் கேட்டு,
பிய்த்தெடுக்கும்
தாலிக்கயிறு,

மருமகள் பற்றி
தினமும் மகாபாரதம் பாடி
பாச வலை போடும்
தொப்புள் கொடி,

ஒயிலாய் நடந்து வந்து
பக்கத்து சீட் டைப்பிஸ்ட்
போடும்
பார்வைக் கொக்கி,

'பத்தாயிரம் தாரேன்,
பவிசாய்
முடிச்சுக்குடுங்க'-
மேசைக்கடியில் நீளும்
தூண்டில்கள் ,

எல்லாவற்றிலுமாய்ச்
சிக்கி இழுபட்டு,
சித்திரவதைக்காட்பட்டுச்
செத்துப்போனதென்
மனிதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக