செவ்வாய், ஏப்ரல் 13, 2004

ஓடை பழைய படைப்புகள் 21

ஓடை ஜூன் 2000 தாள் 2

மவுனம் - அ.சிவகாமசுந்தரி

பாடி வரும் நெஞ்சத் திரைக்கடலில்
ஓடி வரும் பசுமை நினைவலைகளின்
நடுவே நின்றாடும் ஓடம்

கவலை ஏடுகளில் கறுப்புப் பேனாவால்
கண்ணீர் மையூற்றி எழுடப்பட்ட
காலத்தால் அழியாத காவியம்

விசாலமான இதயத்திரையில் வரைந்த
வார்த்தைகளால் வருணிக்க இயலாத
விந்தை மிகு வண்ண ஓவியம்

என்னவென்றே தெரியாத உணர்வுகள்
இனம் கண்டறிய முடியாத உறவுகள்
எல்லோரிடத்தும் ஏற்படுத்தும் நிலைமை

உள்ளமெனும் ஓயாத குரங்கு
உவகையின் உச்சத்தில் திளைக்கும்போது
உதடுகள் உச்சரிக்கும் பாஷை

சுகமென சுமைகளை உள்ளம்
சுமந்து வரும்போதெல்லாம்
அதனிச் சுட்டிக் காட்டிடக்
கைகொடுக்கும் கருவி

பதினெட்டு வயது இளங்குருவி
பாடும் புதியதோர் ராகம்
கற்பனையில் உதிக்கும் கட்சிகளின்
கட்டுக்கோப்பு கலையாத தொகுப்பு

கட்டுக்கடங்காத எண்ண அலைகள்
கரையில் சேர்க்கும் ஈரவிழிக் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக