திங்கள், ஏப்ரல் 12, 2004

ஓடை பழைய படைப்புகள்-4

ஓடை ஏப்ரல் 2000 தாள் 1

சிறகுகள் - நா.வெ.ரா

ஓர் இமைப் பொழுதில்
சட்டென்று உதிர்த்து
உயரே எழும்பி
விண்ணில் செலுத்தி

பல நாட்கள் என் காலுக்குக் கீழே
பூமியைப் பதித்த சிறகுகள்
சட்டென்று சுமைகளானதால்
ஈர்ப்பு விசையால்
பூமியை நோக்கி வெகு வேகமாய் நான்

அந்தி வானமாய்
அந்த நாளைய காட்சிகள்
நெஞ்சம் படபடக்க
சிறகுகளின் சுமையால்
முட்டிக் கொண்டு நிற்கிறது கண்ணீர்

இனி எப்படி வாழ்வேன் சிறகின்றி?
பூமியில் தலை முட்டி,
தவிடு பொடியாகி
மண்ணோடு மண்ணாகிக் காற்றில் கலந் தாக வேண்டும்!

எனைச் சுற்றி நீர் நிலைகள்
எனக்கொன்றும் ஆகவில்லை
அனிச்சையாய் நீந்துகின்றன காலகள் -
கரையடைந்து மீண்டும் நடக்கின்றன
இத்தனை நாட்களாய்
எப்படி மறந் தேன் கால்களை ?

இப்போது சிறகின் பாரம் உணரவில்லை
திரும்பிப் பார்க்கிறேன்
சிறகுகள்
வெறும் இறக்கைகளின் கூடாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக