வியாழன், ஏப்ரல் 08, 2004

மழை-3, துளி-6

haikooganesh@yahoo.com

அரிசிய அதக்காத புள்ள -
கல்யாணத்தன்னைக்கு
அடமழை பிடிக்கும்....

புள்ளறுக்கப் போற பொம்பளைக
சுத்த பத்தமா போகனும் -
இல்லாங்காட்டி பூச்சி கீச்சி
பின்னாலேயே வந்துப்புடும்

ஒத்த புளியமரம் பக்கம்
தனியா போகாதீக...
முனி அடிச்சுப்புடும்

கால் ஆட்டாதடா.. படவா
வூட்டுக்கு ஆவாது ..

இப்படித்தான் ஏதாவது
கோளாறு சொல்லிக்கிட்டுக் கிடப்பா..
அப்பத்தா..

ஊசியாய்க் குத்தும்
மார்கழிப் பனிக்கு
பொசுக்குன்னு
பலியாகிப் போனாள்..

ராவுல நாய்
ஊளையிடும் போதே
எனக்குப்பட்டுச்சுன்னு
புலம்பிக் கொண்டார்- தாத்தா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக