வெள்ளி, ஜூன் 07, 2013

மழை-8, துளி-9 : தொடங்கு

தொடங்கு  --கைகாட்டி


 
இளைஞனே !
அந்த வானம்பாடியிடம்
என்ன யாசிக்கிறாய்?
இழந்து போன  உன் சிறகுகளையா?

மெக்காலேயின் கல்விச் சக்கரத்தில்
சிக்கிச் சிதைந்து போன
உனது நம்பிக்கையையா?

இப்பாலைவனச் சகதியில்
அமுக்கப்பட்ட உனது உரிமையையா?

குறைப்பிரசவத்தில் செத்துப்போன
நம் விடுதலையையா?

எதைத் தேடுகிறாய்
நண்பனே ?

அதோ விடிகிறது,
வானம்பாடி கானம் பாடி
காற்றை நனைக்கிறது

இதோ தெரிகிறதே!
சிகரத்தின் நுனி,
தொடங்கு
தொட்டுவிடும் தூரம்தான்

சோர்வை விடுத்து
சோம்பலை முடித்தால்
சோதனையே
இங்கு சாதனையாகும்


----------[1994-95]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக