வெள்ளி, ஜூன் 07, 2013

மழை-8, துளி-4 : முட்களே நமக்கானவை

முட்களே நமக்கானவைபுலியூர் முருகேசன்

-

நீர்த்துளி நிறைந்த பொய்கை

கல்பட்டால் உடைந்திடாது;

விரிசலாய் மனம் தெரியும்

யார் விட்ட கல்லினாலோ?

மெல்லவே நிஜங்கள் புரியும்;

மலர்கள் நமை நினைப்பதில்லை

பூப்பது அவையின் இஷ்டம்.

முட்களே நமக்கானவை.

-

நிழல்களை கரைத்துப் போகும்

கடல் அலை வீசும் கைகள்

நிஜங்களை முடமாக்கி விடும்

நடுநிசி கனவுப் பாரம்;

வழிந்தோடும் விழியின் ஓர

வசந்தத்தின் மூச்சுக் காற்று,

எப்படி உயிர்த்து எழுவேன்

என்குடல் சருகாய்க் கருக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக