திங்கள், அக்டோபர் 02, 2006

மழை - 5 துளி - 2

சாவி -சகாரா

வானிலிருந்து அருவி விழுகிறது
உச்சியைப் பேர்த்தபடி !
புள்ளிமானின் துள்ளலாய்த்
தெறிக்கிறது நுரை !
பிளவுபடாமல் தாங்கும் பாறை உருண்டைகள்
குளிக்கின்றன-
யானைகளைப் போல.

பூக்கள் மிதந்து வருவதில்
வண்ணத்துப் பூச்சிகளின் வசீகரம் !

வேர்விட்டு நீர் உறிஞ்சும் மரங்கள்
முகத்தில் புன்னகையோடு !

குரங்குகள் குதூகலித்துத் தாவும்
கிளைக்குக் கிளை- அழகை இரசித்தபடி !

ஓடும் நீரருகே -
செடிக் காம்புகளில் மலரும்
புதிய பூக்கள் !

வருகிற தென்றலின் சிலுசிலுப்பில்
பரவுகிறது எங்கும் மணம்
தாங்க முடியாமல் ஆடுகிறது செடி.

மறைவில்
மலம் கழிக்கிறான்
மனிதன் !

( பூங்குயில் செப். - அக். 96)
(நன்றி: கவிஞர் சகாராவின் 'முள்ளின் நுனியிலும் ஆகாயம்' கவிதைத் தொகுப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக