ஞாயிறு, அக்டோபர் 01, 2006

மழை - 5 துளி - 1

இலையின் கழுத்தொடிந்து
இரத்தம் கசியும் கைகளோடு வரும்
இந்தக் காற்று அழுந்தி மோத-
ஆடைகளோடு சேர்ந்து சதைகளும்
பிய்ந்து போகும்.
இருதயம்,இரைப்பை,குடல் என
எல்லாம் அறுந்து எங்கோ போய் விழும்.
பட படவென எலும்புகள் முறிந்து
எரிபடும் நிகழ்வு அறிய செவியும் இல்லை
விழியும் இல்லை.
ஊசிகளில் குத்திக் கிழிபட்டு நறுக்கித் தூவிய
மழைமேகம் மாதிரி தலைமுடி மூளையோடு
சிதறலாகும்.
இன்னும் இலையின் கழுத்தொடித்து
இரத்தம் கசியும் கைகளோடு வரும் காற்று;

திரியைத் தின்னாமலும் என்னைக் குடிக்காமலும்
உயிர்த் தீபம் ஒற்றையாய் நின்று எரியும்.
அறுபடாமல்...
அணைந்து விடாமல்...
- புலியூர் முருகேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக