திங்கள், மே 03, 2004

மழை 4 துளி 4

மறுபடியும் - புலியூர் முருகேசன்

மறுபடியும் -
நம் வாக்குகளுக்குச் சவப்பெட்டி!

இருப்பவர்களுக்காக இரக்கப்படத் தெரியாமல்
பிணங்களுக்காக பரிதாபப்படும் இந்தியர்கள் நாம்!

பாராளுமன்றத்தில் வேதம் ஓதும் சாத்தான்களுக்காகவே
பிணம் காய்ச்சி மரங்கள் வளர்கின்றன.

ஜாதி மத வேறுபாடின்றி எல்லாப் பேய்களும்
எப்படியோ தயாராகி ஒன்றுபடுகின்றன
பிண அறுவடை நாளில் !

அழுகிய, பிணி பிடித்த , துர்நாற்றம் கிளப்புகிற
பிணங்களைக் கூட கட்டியணைத்து
முத்தம் கொடுக்கிற அளவிற்கு
மோகம்
அந்த சுடுகாட்டு நாற்காலி மேல் !

எச்சரிக்கை -
பாராளுமன்றத்தில் ஒப்பாரி வைக்க
பிணங்களைச் சேகரித்துக் கொண்டேயிருந்தால் -

ஒருநாள்
இந்தியாவில் பாராளுமன்றம் இருக்காது -
பாரழுமன்றம் மட்டுமே மீதமாயிருக்கும்
ஊர் ஓர சுடுகாடு போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக